ஆப்நகரம்

மீரட்டில் பயங்கரம்; செல்போனால் தற்கொலை, கொலை, கைது

மீரட்டில் 35 வயதான பெண் ஒருவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு 5 வயது குழந்தை உள்ளது. இவரது முன்னாள் காதலர் சுபம் குமர். இவரும் இந்த பெண்ணும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன் செல்போனில் சுபம் குமார் படம் பிடித்து வைத்து இருந்தார்.

Samayam Tamil 27 May 2019, 4:54 pm
மீரட்டில் 35 வயதான பெண் ஒருவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு 5 வயது குழந்தை உள்ளது. இவரது முன்னாள் காதலர் சுபம் குமர். இவரும் இந்த பெண்ணும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன் செல்போனில் சுபம் குமார் படம் பிடித்து வைத்து இருந்தார்.
Samayam Tamil murder_0.


இந்த படங்களை டெலீட் செய்யாமல் செல்போனை சுபம் பிரஜாபதி என்பவரிடம் விற்றுவிட்டார். பிரஜாபதி இந்த படங்களை இணையத்தில் பதிவேற்ற, இப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால் மனமுடைந்த அப்பெண் தன் ஐந்து வயது குழந்தையோடு மேம்பாலம் ஒன்றில் இருந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மீட்பு பணியில் இறங்க, குழந்தை காப்பாற்றப்பட்டது. பெண் உயிரிழந்தார். தன் முன்னாள் காதலியின் தற்கொலையால் ஆத்திரமடைந்த சுபம், பிரஜாபதியை தன் அடியாட்களுடன் சேர்ந்து கொலை செய்தார்.

இதனையடுத்து போலீஸார் சுபம் மற்றும் அவரது ஆட்களை தீவிரமாகத் தேடத் தொடங்கினர். சுபம்மின் ஆட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் போலீஸாரும் திருப்பி தாக்க, சில காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

ஒருவழியாக சுபம் மற்றும் அவரது ஆட்களை போலீஸார் கைது செய்தனர்.
செல்போனால் ஒரு தற்கொலை, ஒரு கொலை, கைது ஆகியவை நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி