ஆப்நகரம்

சென்னையில் செய்தி சேனல் அலுவலகத்தில் கத்தியுடன் புகுந்து மிரட்டல்..! மர்ம நபர் கைது

சென்னை அருகே தனியார் செய்தி சேனலில் மர்ம நபர் ஆயுதத்துடன் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 3 Aug 2021, 8:48 pm
சென்னை ராயபுரம் காமராஜபுரம் சாலையில் உள்ள சத்யம் தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sathiyam tv


சமூக ஊடகங்களில் வெளியான இதுதொடர்பான வீடியோ ஒன்றில், போலீசார் அந்த நபரை கைது செய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அப்போது அந்த நபரை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்கின்றனர். அவர்களை பார்த்து அந்த நபர் ஒருமையில் தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், '' நல்லா வீடியோ எடுங்க, இந்த வீடியோவை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்'' என்று மிரட்டும் பாணியில் பேசுகிறார்.

அப்போது அருகிலிருந்த போலீசார் அந்த நபரை சமாதானம் செய்கின்றனர். இந்த சம்பவம் குறித்த பின்னணி இன்னும் வெளியாகவில்லை.


சூடுபிடிக்கும் டிஜிபி பாலியல் வழக்கு: நேரில் ஆஜராகும் காவல் அதிகாரிகள்..!

ஒரு செய்தி நிறுவனத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்து தைரியமாக ஒரு நபர் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் ராயபுரம் பகுதியில் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட சேனலின் ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி