ஆப்நகரம்

'ஓமிக்ரானில் இருந்து யாரும் தப்பமுடியாது'.. மனைவி, பிள்ளைகளை கொன்ற பேராசிரியர்..!

ஓமிக்ரான் வைரசுக்கு பயந்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த பேராசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு

Samayam Tamil 4 Dec 2021, 6:52 pm
கான்பூரில் மூத்த தடயவியல் பேராசிரியர் ஒருவர் ஓமிக்ரான் வைரசுக்கு பயந்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil professor kills wife and children


கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அடித்து ஓய்ந்த நிலையில் நான்காம் அலை தொடர்பான பதட்டம் மக்களிடையே நிலவி வருகிறது. ஓமிக்ரான் எனப்படும் கொரோனா வைரஸின் வேரியண்ட் தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் கால் பதித்த நிலையில், கடந்த வாரம் முதல் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளது.

இன்று ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு திரும்பிய 72 வயது முதியவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. மேலும், மற்ற வைரஸை விட ஓமிக்ரான் வைரஸ் விரைவாக பரவக்கூடும் என்ற உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தடயவியல் பேராசிரியர் ஒருவர் 'ஓமிக்ரான் அனைவரையும் கொல்லும்' என்று உறவினருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ளார்.முதலில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பிள்ளைகளின் தலையை சுத்தியால் அடித்து உடைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கல்யாணம் பண்ணிக்க மாற்றாரு சார்... காதலன் மீது ஜல்லிக்கட்டு ஜூலி புகார்..!

பின்னர், சம்பவத்தை குறித்து தனது சகோதரருக்கு மெசேஜ் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த பேராசிரியர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது. மேலும், சகோதரனுக்கு அனுப்பிய மெசேஜில், 'கொரோனா உயிரிழப்புக்களால் மிகவும் மனம் வெறுத்துவிட்டேன், ஓமிக்ரானால் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்' என்றும் கூறியிருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து தலைமறைவான பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி