ஆப்நகரம்

சேலத்தை மிரட்டும் சைக்கோ கொலைகாரன்: மக்களே உஷார்!

சேலத்தில் தொடர் கொலைகளை அரங்கேற்றும் சைக்கோ கொலைகாரனை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Samayam Tamil 4 Feb 2020, 4:57 pm
சேலம் காசகாரனூர் பகுதியில் சாலையில் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் கல்லாலால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
Samayam Tamil சேலத்தை மிரட்டும் சைக்கோ கொலைகாரன்


இந்நிலையில் இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வாளகத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நித்தி போன ஆன்மிகச் சுற்றுலா: தேடியலையும் கர்நாடக போலீஸ்!

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் இளைஞர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் தலை மீது பெரிய கல்லைத் தூக்கி கொலை செய்தது தெரியவந்தது.

AIADMK: சும்மா அடி வெளுத்த பாஜக; ஓட்டம் எடுத்த அதிமுக பிரமுகர் - கிருஷ்ணகிரி அதகளம்!

இந்த கொலையைச் செய்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதே பாணியில் நேற்றும் கொலை நடந்திருப்பதால் அந்த கொலையையும் இவரே செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பெண்களை கட்டி இழுத்துச் சென்ற பஞ்சாயத்துத் தலைவர்..! மேற்கு வங்கத்தில் அட்டூழியம்

கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த பணம், பொருள்களையும் அந்த நபர் திருடிச் சென்றுள்ளார். இவரது புகைப்படத்தை சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் அனைத்து வாட்ஸப் குழுக்களுக்கும் அனுப்பி அவரைப் பற்றிய தகவல் இருந்தால் தெரிவிக்க காவல்துறையினர் கேட்டுள்ளனர். மேலும் பேஸ்புக்கிலும் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இனியொரு அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி