ஆப்நகரம்

கிண்டி அருகே வழிகாட்டி பலகை விழுந்து வாகன ஓட்டி பரிதாபமாக பலி - ஏர்போர்ட் சாலையில் பரபரப்பு

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Aug 2022, 4:23 pm
சென்னையில் உள்ள ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. இதனால், ஸ்கூட்டரில் சென்ற ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil alandur signboard accident


எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள விபத்தால் அப்பகுதியில் சென்று வரும் வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சம்பவத்தின்போது பலத்த காற்று ஏதும் இல்லாத சூழலில் இரும்பு பலகை எப்படி விழுந்தது என கேள்வி எழுந்துள்ளது.


ஏற்கனவே அந்த பலகை வலுவிழந்து காணப்பட்டதா அப்படி இருந்தால் சம்மந்தப்பட்ட நிர்வாகம் ஏன் அலட்சியமாக இருந்துள்ளது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் போக்குவரத்து போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். மேலும், இடிந்து விழுந்த பலகையை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி