ஆப்நகரம்

சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து விபத்து: 9 பயணிகள் படுகாயம்

ராணிப்பேட்டை மாவட்டம் அருகே அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி பெரும் விபத்து.

Samayam Tamil 4 Dec 2021, 9:05 pm
அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற சரக்கு லாரி குறித்து போலீசார் விசாரணை
Samayam Tamil ranipet bus accident


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விசாரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரத்தை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பின்னால் வந்த சரக்கு லாரி உராசி நிற்காமல் சென்று விட்டது.

இதனால் நிலை தடுமாறிய அரசு பேருந்து சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 9 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் ஆற்காடு நகர காவல் நிலையம் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்ததன் பேரில் இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

'ஓமிக்ரானில் இருந்து யாரும் தப்பமுடியாது'.. மனைவி, பிள்ளைகளை கொன்ற பேராசிரியர்..!

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய சரக்கு லாரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி