ஆப்நகரம்

குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்..! மதுரையில் அதிர்ச்சி...

மதுரையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையினால் இளம்பெண் தனது ஒரு வயது ஆன் குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Feb 2020, 4:16 pm
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன் (31), துர்கா (28). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு வயதில் ரித்திக் என்ற ஆன் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபாகரன் பெரியபாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கருது வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
Samayam Tamil குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்


இதனால் பலமுறை துர்கா கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். அந்த சமயங்களில் பிரபாகரன் மனைவியை சமாதானப்படுத்தி வாடிபட்டிக்கு அழைத்து வருவாராம் . இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பிரபாகரனுக்கும், துர்காவுக்கும் இடையில் கடும் சண்டை கிளம்பியுள்ளது. இதனால் மிகுந்த மனா உளைச்சலில் இருந்த துர்கா இனி வாழவே கூடாது நின்ற முடிவில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.


ஆனால் குழந்தையை தனிமையில் தவிக்க விட்டு செல்ல மனமில்லாததால் சிசுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து நேற்று வழக்கம்போல பிரபாகரன் வேலைக்கு சென்று விட்டார். அப்போது தனிமையில் இருந்த துர்கா குழந்தையை கொலை செய்து விட்டு, மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரியில் பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்! சிறுவன் கைது...

பின்னர் துர்காவை சந்திக்க பக்கத்து வீட்டிலிருந்து சிலர் வந்த போது தாய், குழந்தை இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு பதறிப்போயினர். இதுகுறித்து அவிநாசி காவல் நிலையத்துக்கும், துர்காவின் கணவர் பிரபாகரனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி