ஆப்நகரம்

பெண் காவலருக்கு 'பளார்' விட்ட பெண்மணி.. விழுப்புரத்தில் பகீர் சம்பவம்..!

விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது பெண் கணவரை பெண்மணி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 9 Feb 2023, 6:31 pm
மேல்மலையனூர் அடுத்த செக்கடிக்குப்பம் ஊராட்சி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற போது ஆத்திரம் அடைந்த பெண்மணி கோவத்தின் வெளிப்பாடாக பெண் காவலரை கன்னத்தில் அறைந்தார்.
Samayam Tamil villupuram crime


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா செக்கடிகுப்பம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகளை வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற சென்றனர்.

அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த மணி என்பவருடைய மனைவி கெங்கம்மாள் வீட்டு முன் படுத்துக்கொண்டு மயக்கம் வந்ததை போல நாடகமாடினார். காவலர்கள் கெங்கம்மாளை எழுந்துகொள்ளுமாறு வலியுறுத்தியும் அவர் உடல் அசைவின்றி கணவனின் மடி மீது தலை வைத்து படுத்துக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில், அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர் கைப்பிடித்து எழுப்பிய போது ஆத்திரம் அடைந்த கெங்கம்மாள் பெண் காவலரை முகத்தில் பளார் என்று அறைந்தார். திருப்பி அறைந்த பெண் காவலரை மீண்டும் கெங்கம்மாள் தாக்கம் முற்பட்டார். அங்கு இருந்த சக காவலர்கள் அந்த கெங்கம்மாளை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கம் மீட்பு; சிக்கியவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

மேலும், தரிசு நிலத்தில் இருந்த வீடுகளை இடித்ததை போல அங்கு இருந்த அம்மன் கோவில் சுற்று சுவரையும் இடிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், அந்த சுவற்றை அகற்றுவதற்கு முன்னதாக வட்டாட்சியர் அலெக்ஸ்சாண்டர் கற்பூரம் ஏற்றி எலுமிச்சம்பழம் சுற்றி போட்டு வேண்டிய பின் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றினார். பின்னர் அரசுக்கு சொந்தமான தரிச நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.

இந்த சம்பவத்தின்போது, மேல்மலையனூர் தாலுகாவை சார்ந்த வட்டாட்சியர், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு பணியில் அவலூர்பேட்டை, நல்லான்பிள்ளைபெற்றால் காவல் நிலையத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி