ஆப்நகரம்

குழந்தையுடன் இளம்பெண் மிஸ்ஸிங்... தந்தை வீட்டில் இருந்தபோது திடீர் மாயம்.. ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு அருகே குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வந்த பெண் திடீரென மாயமாகியுள்ளார்.

Samayam Tamil 15 Apr 2023, 5:45 pm
கணவனை பிரிந்து வந்து தந்தை வீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த இளம்பெண் குழந்தையுடன் வெளியில் சென்ற நிலையில் பின்பு வீட்டுக்கு வரவில்லை. இதனால் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Samayam Tamil woman missing


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த முருகன்புதூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகள் சரிகா (22). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இந்த நிலையில், சரிகா கடந்த 2019-ம் ஆண்டு நவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் வீட்டில் குடும்பம் நடத்தி வந்த சரிகா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது தந்தை வீட்டுக்கு குழந்தையுடன் வந்துவிட்டார். தந்தை வீடு முருகன்புதூர் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சரிகா தனது அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறி குழந்தையுடன் சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. இரவு நேரமாகியும் வராததால் கலக்கம் அடைந்த தந்தை மாரிமுத்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. உறவினர்கள், தெரிந்தவர்கள் மற்றும் சரிகாவின் தோழிகளிடம் விசாரித்தும் பயனில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை மாரிமுத்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் மகள் மற்றும் பேரனை காணவில்லை என்று புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சரிகாவையும், குழந்தையையும் தேடி வந்தனர்.

ஏய் விடு வரேன்... ஆர்டிகள் 311.. பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்... கதறிய வசந்தி..!

கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வசித்த வந்த சரிகா திடீரென மாயமாகி இருப்பது போலீசாருக்கு பலவித சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் நவீன்குமார் குடும்பம் காரணமாக இருக்குமா? சரிகா எடுத்த முடிவா? சரிகாவுக்கு வேறேதேனும் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதா? தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் வெளியேறியுள்ளாரா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி