ஆப்நகரம்

இப்படியும் ஒரு மரணம்..! குளிக்கச் சென்ற பெண்ணின் மீது விழுந்த இடி... நெல்லை சோகம்

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் இடி தாக்கியதில் உயிரிழந்தார்.

Samayam Tamil 13 Apr 2021, 10:32 pm
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், நெல்லை மாநகர பகுதியில் மாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
Samayam Tamil ராஜேஸ்வரி


சிறிது நேரத்தில் பலத்த இடி மின்னலுடன் கனமழை மாநகரப் பகுதிகளான நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

மாலை நேரத்தில் துணி துவைத்து குளிப்பதற்காக நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45 ) தாமிரபரணி ஆற்று பகுதிக்கு சென்றார்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதனை அறிந்த சந்திப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த ராஜேஸ்வரி உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் காவல் துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

அடுத்த செய்தி