ஆப்நகரம்

சமையல் சிலிண்டர் வெடித்து விபத்து... இளம்பெண் போராடி பலி.. கவனம் தேவை

வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 80% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 3 Mar 2023, 4:08 pm
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகிலுள்ள மின் நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் தீபிகா (30). இவரது கணவர் மகேந்திரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்ற தீபிகா கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தனியார் பட்டுச்சேலை கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு 20 நாட்களுக்கு முன்பு தான் இந்த வீட்டில் தனது தாயுடன் குடியேறினார்.
Samayam Tamil kanchipuram cylinder accident


இந்நிலையில், தீபிகாவின் தாயார் இன்று வெளியே சென்று இருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த தீபிகா வீட்டின் முன் பக்க கதவுக்கு தாப்பாள் போட்டு சுடுத்தண்ணீர் வைக்க சமையல் அறைக்கு சென்று கேஸ் அடுப்பினை பற்ற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக சமையல் அறை முழுவதும் பரவி இருந்தநிலையில் தீபிகா அடுப்பை பற்றிய உடனே பயங்கர வெடிச் சத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறை, 108ஆம்பூலன்ஸ்,காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அத்தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை மற்று காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து 80% சதவிகிதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்த தீபிகாவை மீட்பு 108ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் தீபிகா அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இது குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி வினோத் சாந்தாராம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், இந்த தீவிபத்து குறித்து காஞ்சி தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி