ஆப்நகரம்

கோவையில் நாயை பிரிய மனமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..

கோவையில் ஓயாமல் குரைத்து வந்த நாயை வெளியில் துரத்தி விட மனமில்லாமல் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Nov 2019, 5:05 pm
கோவை சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா (23). பி.பி.ஏ பட்டதாரியான கவிதா, பெரியநாயக்கன்பாளையம் பத்திரப்படிவி அலுவலகத்தில் உதவி எழுத்தாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கவிதா, சீஸர் என்ற நாயை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
Samayam Tamil 66


வீட்டிலுள்ள பெற்றோருக்கு நாயின் மீது பெரிய ஈடுபாடு இல்லாத நிலையில், கவிதா மட்டும் அதற்கு உணவு அளித்து பராமரித்து வந்துள்ளார்.

மதுரை: தீயில் கருகிய பெண் குழந்தைகள்.. மனைவி வேறொருவருடன் உறவில் இருந்ததால் விபரீதம்..!

இதனால் சீஸருக்கு கவிதா மீது அதிக பாசம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் சீஸர் குறைத்துக்கொண்டு வந்ததால் அக்கம்பக்கத்தினருக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் பலமுறை பெருமாளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் நாயை எங்கயாவது விட்டு விடும்படி கவிதாவிடம் பெருமாள் கூறியிருக்கிறார். இருப்பினும் அதனை மருத்துவந்துள்ளார் கவிதா. இவ்வளவு சொல்லியும் ஏன் கேட்காமல் இருக்கிறாய் என தந்தை பெருமாள் கவிதாவை கண்டித்ததாக தெரிகிறது.

தந்தையின் பேச்சையும் மீறக்கூடாது, நண்பனை போல பழகிவிட்ட சீசரையும் பிரியக்கூடாது என நினைத்த கவிதா, கடிதம் ஒன்றை எழுதி விட்டு, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியுடன் உல்லாசம்... இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தை அடித்துக் கொலை...

சம்பவம் அறிந்த விரைந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை விவகாரத்தில் கவிதாவுக்கு வேறு ஏதேனும் அழுத்தங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி