ஆப்நகரம்

இரு பிரிவு மோதல்.. வாலிபர் கொலை; போலீஸ் குவிப்பால் பதற்றம்!

இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் வாலிபர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் எதிரொலியாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Samayam Tamil 3 Jan 2023, 10:33 pm
தேனி மாவட்டம் பெரியகுளம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார் பட்டி பகுதியில் விவசாய தென்னந்தோப்பில் இரு வேறு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அதே பகுதியை சேர்ந்த வெண்டி முத்தையா என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் (27) என்பவர் அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil theni murder


இந்த தாக்குதலில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் வினோத் குமார் ( 32) மற்றும் தங்கப்பாண்டி மகன் மனோஜ் குமார் (17) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வினோத்குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னைக்கு சூப்பர் ஜாக்பாட்; ஏர் இந்தியா புத்தாண்டு பரிசு!
இதுகுறித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெங்குவார்பட்டு பகுதியில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

இதன் காரணமாக காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதோடு தாக்குதலில் ஈடுபட்ட 10 மேற்பட்ட நபர்களை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இறந்த மற்றும் படுகாயம் அடைந்த நபர்களின் உறவினர்கள் அழுது கதறும் சம்பவத்தால் மருத்துவமனை வட்டாரத்தில் பதட்டம் நிறைவு வருகிறது மேலும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர் உள்ளன

பள்ளி ஆசிரியர்கள் ஹேப்பி; கல்வித்துறை திடீர் உத்தரவு!
மேலும் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் மற்றும் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் பதட்டம் நிலை வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி பிடிக்கும் பணியில் ஆய்வாளர் மீனாட்சி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் 50க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, கெங்குவார்பட்டி பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி