ஆப்நகரம்

பிறந்த நாளில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான கோவை சிறுமி - போலீசார் எடுத்த அதிரடி!

கோவையில் 17 வயது சிறுமி தனது பிறந்த நாளில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Dec 2019, 11:32 am
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு கடும் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரக்கம் காட்டாமல் அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Samayam Tamil Rape


இந்த சூழலில் கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலேசியாவில் இருந்து தேனிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண்- பேஸ்புக் கூலிப்படை கைது

கோவை மாவட்டம் சீரநாய்க்கன்பாளையத்தில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி தான் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமி தனது 17வது பிறந்த நாளை காதலுடன் கொண்டாட பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுற்றி வளைத்தது. காதலனை அடித்து உதைத்துவிட்டு அச்சிறுமியை மறைவான இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு 6 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை படம்பிடித்து வைத்து கொண்டனர்.

சென்னையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...! துக்கத்தில் வாடும் குடும்பம்...

பின்னர் இருவரையும் விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து காதலனின் வீட்டிற்கு சென்று அங்கேயே சிறுமி தங்கியுள்ளார். அடுத்த நாள் மாலை தனது வீட்டிற்கு திரும்பி நடந்த விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

உடனே அவர்கள் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி: சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மூவர் கைது!

இதுபற்றி நடத்திய தீவிர விசாரணையில் குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சீரநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல்(21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28), நாராயணமூர்த்தி(30) ஆகியோர் ஆவர்.

இவர்கள் அனைவரும் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி