ஆப்நகரம்

'பேய காணோம்' படப்பிடிப்பில் மீராவை காணோம்... பொருட்கள் அபேஸ்... ஓடி ஒளிந்த நடிகை

சிறையில் இருந்து வந்த மீரா மிதுன் படப்பிடிப்பின் போது தலைமறைவாகி விட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Dec 2021, 2:08 pm
மாடலிங் துறையில் இருந்துகொண்டு அழகி போட்டிகளில் பங்கேற்று வந்த மீரா மிதுன் அழகி பட்டத்தை மோசடியாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. தொடர்ந்து அவரது 'மிஸ் சவுத் இந்தியா' பட்டமும் திரும்ப பெறப்பட்டது. அப்போது முதல் சமூக ஊடகங்களிலும், செய்திகளிலும் இவர் பெயர் அடிப்படை தொடங்கியது. அதன் பின்னர், பிக்பாஸ் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கூடுதல் கவனம் பெற்றார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
Samayam Tamil file pic


இந்நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனிடையே, மீரா மிதுன் தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேவலமாக திட்டியதுடன், திரைப்பட துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அது தொடர்பான புகாரில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த மீரா மிதுனுக்கு 'பேயை காணோம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை செல்வ அன்பரசன் இயக்கி வருகிறார்.


இந்நிலையில், இந்த அப்படத்தின் ஷூட்டிங்க் கொடைக்கானலில் நடந்து வந்த நிலையில், மீரா மிதுன் திடீரென தலைமறைவாகியுள்ளார். மேலும், அவருடன் வந்த உதவியாளர்கள் 6 பேரும் தலைமறைவாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மீரா மிதுன் மற்றும் அவரது உதவியாளர்கள் தங்கி வந்த அறையில் இருந்த பொருட்களும் திருடு போயுள்ளது. படப்பிடிப்பு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மீரா மிதுன் யாரிடமும் சொல்லாமல் தலைமறைவாகியுள்ளதால் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளராக இயக்குனர் அன்பரசன் புகார் அளித்துள்ளார்.

3 மாணவர்களின் உயிரை பறித்த மோசமான சுவர்... விபத்து எப்படி ஏற்பட்டது?

இச்சம்பவம் பட குழுவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பட்டியல் இனத்தை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் வரும் ஜனவரி 11ம் தேதி கட்டாயமாக ஆஜராக முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி