ஆப்நகரம்

நடிகை ராதிகா என்னை அடித்தார் - பயில்வான் ரங்கநாதன் பகீர்..!

நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் மீது தக்க ஆதாரங்களுடன், தகவல்களையும் ,செய்திகளையும் சமூகவலைத்தளங்களில் பேசி வருகிறேன்" என நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 May 2022, 5:56 pm
"அனுபவத்தை வைத்து மட்டுமே யூட்யூபில் மற்றவர்களைப் பற்றிப் பேசி வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்"
Samayam Tamil file pic


பத்திரிகை துறையில் 45 ஆண்டு காலம் அனுபவம் உள்ளவன் என்னைப் பற்றி முற்றிலும் தவறாகும் பொய்யாகவும் பேசிவரும் சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் புகார் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராதிகா என்னை திருவான்மியூரில் அடித்தார்கள். ஆனால் அவர் பெசன்ட் நகர் என்று சொல்லியது தவறு என்றும் எனக்கு செய்தி எழுத கற்று கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்றும் என்னை வாழ வைப்பது யூடியூப் சேனல் மட்டுமே என்று கூறினார்.

ராஜன் கூறுவது முற்றிலும் பொய்... நான் இதுவரை எந்த சினிமா நடிகர், நடிகைகளிடம் பணம் வசூலித்தலில்லை... மேலும் நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் மீது தக்க ஆதாரங்களுடன் தகவல்களையும் செய்திகளையும் சமூகவலைத்தளங்களில் பேசி வருவதாகவும் கூறினார்.

எனக்கு யூடியூப் சேனல்களில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளனர் என்றும் யூடியூப் சேனலில் உண்மையை மட்டுமே பேசி வருவதாகவும் வேறு தவறான தகவல்களை யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பதில்லை எனவும் கூறினார்.

கூட படுத்தவளையே கொன்னுட்டான்... சித்ரா ரூமுக்கு போயிருக்கேன்... ஓபனாக பேசிய பிரபலம்!

என் மீது புகார் கொடுத்துள்ள ராஜன் எதற்காக குடும்பத்தை விட்டுவிட்டு தனியார் ஓட்டலில் தங்கி இருக்கிறார் என்று கேள்வி எழுப்பிய அவர் பல விழாக்களிலும், சேனல்களிலும் தொடர்ந்து அருவருப்பாகவும் தரக்குறைவாகவும் பேசியும் என்னை மிரட்டியும் வருவதாக ராஜன் மீது குற்றம் சாட்டினார்.

நான் யூடியூப் சேனல்களில் அப்போதைய நடிகர் ஜெய்சங்கர் முதல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வரை பேசியதாகவும் என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து மட்டுமே யூட்யூபில் மற்றவர்களைப் பற்றிப் பேசி வருவதாகவும் மக்கள் அதற்கு பெருமளவு ஆதரவு அளித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், எனக்கு தனிப்பட்ட யூடியூப் சேனல் எதுவும் இல்லை என்றும் நான் பிற யூடியூப் சேனல் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் மட்டுமே பங்கேற்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் யூடியூப் சேனலிலும் நான் தொடர்ந்து பேசி வருவதாகவும் அதில் நான் தவறாக பேசியிருந்தால் அவர் என்னை தொடர்ந்து பேச அனுமதிப்பாரா என்றும் அப்போது கேள்வி எழுப்பினார்.

அடுத்த செய்தி