ஆப்நகரம்

'முன்னாள் அமைச்சரும், நடிகையின் தொடர்பும்'... ஆதாரங்கள் அழிக்கப்படுகிறதா?

முன்னாள் அமைச்சரின் தரப்பு தனது சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்ய செய்கிறார்கள் என்று நடிகை சாந்தினி தேவா புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 3 Jun 2021, 2:15 pm
அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். பல்வேறு காரணங்களுக்காக அமைச்சர் பதவி இவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. மேலும், நடந்த சட்டமன்ற தேர்தலிலும் மணிகண்டனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் மணிகண்டன் அதிருப்தியில் இருந்து வந்தார்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்த சூழலில் மணிகண்டன் கடந்த 5 வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், அமைச்சர் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் பழகி வந்ததாகவும், அவரால் கர்ப்பம் அடைந்து 3 முறை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மிரட்டி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகை சாந்தினி தேவா இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில ஆதாரங்களை காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார். அதாவது, சிபிஐ அதிகாரி என்று கூறி ஷியாம் பிரசாத் என்பவர் நடிகை சாந்தினியின் இ மெயிலுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.


அதில், நடிகை சாந்தினியின் மின்னஞ்சல் கடவுச்சொல்லை அவர் கேட்டுள்ளார். மேலும், உங்கள் கடவுச்சொல்லை வழங்கினால் அதன்மூலம் சிபிஐ உங்களுக்கு உதவி செய்யும் என்றும் வேண்டுமானால் உங்களது வழக்கறிஞரிடம் இதுகுறித்து ஆலோசித்து பின்னர் கடவுச்சொல்லை பகிருங்கள் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நடிகை சாந்தினி தேவா, சிபிஐ அதிகாரி என்று கூறி யாரோ ஒருவர் தனது சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

உடல் முழுக்க வடு, மருத்துவரிடம் புலம்பும் நடிகை சாந்தினி... வெளியான ஆடியோ..!


அண்மையில் நடிகை சாந்தினி தேவா சென்னையில் உள்ள அருண் என்ற மருத்துவரிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நெருங்கிய நண்பரான அந்த மருத்துவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி நடிகை சாந்தினி தேவா பகிர்ந்துள்ளார். அதில், நான் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பெண் என்று கூறும் நடிகை சாந்தினி, முதல்வரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு நிச்சயம் உதவுவார் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த ஆடியோ மூலம் நடிகை சாந்தினி முந்தைய ஆட்சியிலேயே அந்த மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரிய வருகிறது. ஆனால், அப்போது புகார் கொடுக்காமல் ஆட்சி மாற்றம் வரை நடிகை சாந்தினி காத்திருந்தாரா? என்று பல தரப்பில் இருந்து கேள்விகள் எழுகின்றன.

அடுத்த செய்தி