ஆப்நகரம்

அந்த மாதிரி வீடியோவில் நடிச்சிட்டு ஸ்கூலுக்கு போனேன்: பிரபல நடிகை குமுறல்!

சமூக வலைதளங்களில் பரவி வரும் தனது ஆபாச காட்சிகளை நீக்க கோரிய புகாரின் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி பிரபல நடிகை தற்கொலை முயன்றதுடன் அவர் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 19 Oct 2020, 9:44 pm
‘For Sale’ என்ற மலையாளப் படத்தில் பாலியல் வன்கொடுமை காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சோனா அபிரகாம். அந்த காட்சியில் நடித்த போது அவருக்கு வயது 14. இந்த நிலையில் இவர் தொடர்பான ஆபாச காட்சிகள் அண்மை காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை நீக்க கோரி, கேரள முதல்வர், காவல்துறையிடம் சோனா ஆபிரகாம் புகார் அளித்துள்ளார். ஆனால், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என தெரிகிறது.
Samayam Tamil சோனா ஆபிரகாம்
சோனா ஆபிரகாம்


இதனால் மன உளைச்சலில் இருந்த நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது பெற்றோர்கள் அவரை சரியான நேரத்தில் காப்பாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், புதிய வீடியோ ஒன்றை சோனா ஆபிரகாம் வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அதன்படி, ‘For Sale’ மலையாளப் படத்தில் நடித்த போது தனக்கு 14 வயது எனவும், பாலியல் வன்கொடுமை காட்சிகளில் வற்புறுத்தலின் பேரில் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்டவர்கள்முன்னிலையில் காட்சிப்படுத்தப்படவிருந்த அந்த காட்சியில் தான் நடிக்க மறுத்ததாகவும், ஆனால், இயக்குநர் சதீஷ் அனந்தபுரி வற்புறுத்தலின் பேரில் அவரது அலுவலகத்துக்குள் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் சோனா ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

பெண் எஸ்ஐகளுக்கு பாலியல் தொந்தரவு..! பரபரப்பான புகாரில் விசாரணை அறிக்கை

அந்த காட்சியில் நடிக்கும் போது அது தொடர்பான புரிதல் தனக்கு இல்லை என்றும், மறுநாள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ள சோனா ஆபிரகாம், படம் வெளியான போது முறையாக எடிட் செய்யப்பட்டு வெளியானது என்றும், ஆனால், 2 ஆண்டுகள் கழித்து தற்போது எடிட் செய்யப்படாத ஆபாச காட்சிகள் யாரோ பரப்பி விட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வீடியோக்களை நீக்க கோரி சைபர் க்ரைம் உள்ளிட்டவற்ரில் புகார் அளித்தும் பயனில்லை என குற்றம் சாட்டும் சோனா ஆபிரகாம், தற்போது வெளியாகி வரும் அந்த வீடியோக்களால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அவமானத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி