ஆப்நகரம்

பல்லாவரம் அருகே அரசு அதிகாரியை மிரட்டியதாக அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!

சென்னை அருகே வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Samayam Tamil 19 Jun 2021, 9:00 pm
சென்னை பல்லாவரம், ஜி.எஸ்.டி.சாலையில் பேருந்து நிலையம் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சங்கர்(56), கடந்த 10 மாதங்களாக இங்கு பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil ராஜேந்திரன்


இந்நிலையில், இவரது அலுவகத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த அஸ்தினாபுரம் ராஜேந்திரன் என்பவர் வந்து அவருக்கு வேண்டப்பட்டவர்கள் என கூறி திருமண உதவி திட்டத்தின் கீழ் 72000 என்று சான்று கொடுக்க சொல்லியுள்ளார்.

ஆனால், வருவாய் ஆய்வாளர் தகுதியை ஆராய்ந்து 84000 என கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் வருவாய் ஆய்வாளரை ஆபாசமாக பேசி, நான் சொன்னால் தாசில்தாரா கேட்கிறார், நீ கேட்க மாட்டியா? என்று அவரது பணியை செய்ய விடாமல் தடுத்து, வெளியில் வா உன்னை தீர்த்து கட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கொரோனா நிதியை குடித்தே தீர்த்த குடும்ப தலைவன்... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் சங்கர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, ஆபாசமாக திட்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி