ஆப்நகரம்

பல்லி, புழு, வண்டு... 'பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக அரசு மிகப் பெரிய ஊழல்'..! - மாஃபா

பொங்கல் பரிசு வழங்கியதில் திமுக அரசு மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாக அதிமுக கொள்கைபரப்பு துணைசெயலாளருமான மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Jan 2022, 9:23 pm
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று திமுக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று வருகின்றனர். அதே சமயம், அரசு வழங்கியுள்ள அந்த தொகுப்பில் உள்ள உணவு பொருட்கள் தரமற்றதாகவும், பல்லி, பிளாஸ்டிக் ஆகியவை இறந்து கிடப்பதாகவும் குற்றசாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. மேலும், 21 பொருட்கள் என்று சொல்லி சரியில்லாதவைகளே கடைகளில் கொடுப்பதாகவும் தமிழகத்தில் பல இடங்களில் புகார்கள் எழுந்துள்ளது.
Samayam Tamil மாஃபா பாண்டியராஜன்


இந்நிலையில், திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என முன்னாள் அமைச்சரும் அதிமுக கொள்கைபரப்பு துணைசெயலாளருமான மாஃபா பாண்டியராஜன் விருதுநகரில் பேட்டி அளித்துள்ளார். எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் அவரது உருவசிலைக்கு அதிமுகவினருடன் மாலை அணிவித்து மரியாதை செய்தபின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் க.பாண்டியராஜன் கூறியதாவது;

பொங்கல் பரிசு வழங்குவதில் திமுக அரசு மிகப் பெரிய சொதப்பல் செய்துள்ளது. பொங்கல் பரிசு வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவோம் என கூறிவிட்டு தற்போது எதுவும் வழங்காதது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் திமுக வெற்றி பெறாது

ஜல்லிக்கட்டில் தடுப்புகள் கூட முறையாக வைக்கவில்லை. விவசாயிகள் மீது தடியடி நடத்தபடுவது மிகப்பெரிய கொடுமை. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றியது அதிமுக அரசு. ஆனால், இந்த நிகழ்ச்சி சரியாக நடக்கக்கூடாது, இளைஞர்கள் உயிர் பறி போகவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

குடிபோதையில் ஆட்டை பிடித்துக் கொண்டிருந்தவரின் தலையை வெட்டிய கொடூரம்: வாலிபர் பலி

எந்தவொரு அரசாங்கமும் விவசாயிகள் மீது தடியடி நடத்த கூடாது. முறையான அறிவிப்புகள் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு போடாமல் விவசாயிகளை அடித்து விரட்டுவது ஈவு இரக்கமற்ற செயல். சென்ற முறை அதிமுக அரசு சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்தியது. இந்த ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ். அதனால்தான் பழிவாங்கும் நோக்கத்தோடு இவ்வாறு நடக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு முறையாக நடத்தப்பட வேண்டும் என பேசினார்.

அடுத்த செய்தி