ஆப்நகரம்

Breaking: சுபஸ்ரீ மரணம்: தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது.!

சுபஸ்ரீ மரண விவகாரத்தில் பேனர் அமைக்க காரணமாயிருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Sep 2019, 5:57 pm
இந்த விபத்தில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் சார்பில் தடை மீறி பேனர் அமைத்ததற்கும், விபத்தை ஏற்படுத்தியதற்கும் வழக்குப் பதிவு செய்தனர்.
Samayam Tamil 6


வழக்கு பதிவானதை அடுத்து தொடர்ந்து தலைமறைவாகி வந்த ஜெயகோபாலுடைய செல்போன் எண் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் எண்களையும் போலீசார் சேகரித்து ட்ராக் செய்து வந்தனர். அதன் அடிப்படையில் ஜெயகோபால் ஒகேனக்கல் மற்றும் திருச்சி நகரில் இருப்பதாக தற்போது துப்பு கிடைத்துள்ளது.

இதனையொட்டி அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அந்தந்த பகுதிக்கு விரைந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த ஜெயகோபாலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி