ஆப்நகரம்

தேர்தல் பணம் விநியோகித்த அமமுக செயலாளர் கைது

ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் பணம் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செல்வம் நேற்று இரவு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 5 May 2019, 4:57 pm
ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் பணம் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செல்வம் நேற்று இரவு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil 1ef20b94-2a5c-44b8-b4f2-a23b02186547


வருமான வரித்துறை, பறக்கும் படை, மற்ற ஏஜென்சிகள் தேர்தலின்போதான பண விநியோகத்தைத் தடுக்க முயன்று வருகின்றன. லாரி டயர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என பலவித வழிகளில் பணம் கடத்தப்படுகிறது.

தேர்தல் அறிவிக்கும் முன்னரே பணம் தமிழகத்துக்கு பூத் ஏஜெண்டுகளிடம் வந்து சேர்ந்துவிட்டதாக ஒரு கட்சியின் உறுப்பினர் கூறியுள்ளார்.

பொதுவாக அனைத்து கட்சிகளின் பூத் ஏஜெண்ட்களும் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு நன்கு பரிச்சையமானவர்களாகவே இருப்பர்.

நள்ளிரவுக்குப் பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்குக்கு 500 முதல் 2000 ரூபாய்வரை பணம் விநியோகிக்கப்படும்.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் பணம் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செல்வம் நேற்று இரவு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

போலீஸை கண்டவுடன் நெஞ்சு வலி என்ற செல்வத்தை உடனடியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் ஆரோக்யமாக இருப்பதாக மருத்துவர் அறிக்கை கொடுத்ததின் பேரில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி