ஆப்நகரம்

'நான் கெட்ட பொண்ணு, உங்களை கொள்ள போறேன்'.. கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்..

பாலியல் தொல்லை தந்ததாக காதலனுடன் சேர்ந்து வளர்ப்பு தந்தையை கொலை செய்த பெண்ணை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 12 Dec 2019, 2:23 pm
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மும்பை அருகே உள்ள மிதி ஆற்றின் கரையோரம் இருந்த சூட்கேசில் மனித உடல் பாகங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Samayam Tamil கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்


மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ரெபெல்லோ (59) என்ற இசை கலைஞர் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக வீதியில் அனாதையாக சுற்றி திரிந்த ஆராதியா பாட்டில் (19) என்ற பெண்ணை அவர் தத்தெடுத்து தனது அறைவனைப்பில் வளர்த்து வந்தார்.

அப்பெண்ணுக்கு அப்பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் ஆராதியா தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை கொடூரமாக வெட்டியும், எரித்தும் கொலை செய்துள்ளார்.

இதன் நடவடிக்கையில் ஆராதியா எழுதிய கடிதமும், போலீசாரின் தகவலும் சொல்வது என்ன என்பதை பாப்போம். அந்த கடிதத்தில் '' அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். கடவுளே என்னை மன்னியுங்கள். நான் மிகவும் தவறான பெண் என இவ்வாறு ஆங்கிலத்திலும், இந்தியிலும் தனது கைப்பட எழுதியுள்ளார்.

அதன் பிறகு தனது காதலனுடன் சேர்ந்து ரெபெல்லோவை தலையில் அடித்து விழித்திய அவர்கள் பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உயிர் பிரிந்ததை உறுதி செய்த அவர்கள் இறந்த சடலத்தை அவரது வீட்டு கழிவறையில் மூன்று நாட்களாக வைத்து வந்துள்ளனர்.

இந்த சமயத்தில் பிணத்தின் கால்களை ஸ்டவ் மீது வைத்தும் எரித்துள்ளனர். பிறகு உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து அதை மிதி ஆற்றின் ஓரம் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

திருமணம் ஆன 4வது நாளில் புதுப்பெண் கர்ப்பம்..! 80's கிட் சோகம்... நடந்தது என்ன?

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசாருக்கு சூட்கேசில் இருந்த உடல் பாகங்களில் ரெபெல்லோ அணிந்திருந்த சட்டையில் அப்பகுதியில் உள்ள டெய்லர் கடையின் அடையாளம் இருந்துள்ளது. அதனை வைத்துதான் மும்பை போலீசார் ஆராதியா பாட்டில் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காதலனையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தனது தந்தை நீண்ட நாட்களாக எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் கொலை செய்ததாக கூறினார். ஆனால் போலீசார் விசாரணையில் அப்படி ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை, கொலைக்கான காரணத்திற்கு பெண்ணின் காதலன் தந்த யோசனைதான் அது என்று தெரிவிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையோ மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி