ஆப்நகரம்

மண்டை உடைந்து ரத்தம் தெறித்த பயங்கரம்; “ரூட் தல” பிரச்னையை அடுத்து ”கல்லூரி தல” பிரச்னை!

சென்னையைத் தொடர்ந்து, மற்றொரு நகரிலும் ரூட் தல விவகாரம் பெரும் சண்டையை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 28 Jul 2019, 4:03 pm
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தலைநகர் சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கையில் ஆயுதங்களுடன் நடு ரோட்டில் மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil Students Fight


உடனே சென்னை கல்லூரிகளில் பயின்று வரும் “ரூட் தல” மாணவர்களை அழைத்து போலீசார் எச்சரித்தனர். இனிமேல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம், சமூக விரோத செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து, பத்திரம் எழுதிக் கொடுத்துச் சென்றனர்.

ஆவடி அருகே இளைஞர் அடித்துக் கொலை- கள்ளத் தொடர்பு காரணமா?

இந்த விவகாரம் அடங்குவதற்குள் திருச்சியில் யார் “கல்லூரி தல” என்ற வகையில் ஏற்பட்ட பிரச்னை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பிராட்டியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவிகளை சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

இதில் ஜூனியர் - சீனியர் மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். அப்போது கம்புகள், கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கல்லூரி வளாகமே கலவர பூமியானது.

நெல்லை முன்னாள் மேயர் கொலை- உறவினர் மீது போலீசார் சந்தேகம்!

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 27 மாணவர்களை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சண்டையில் 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் மண்டை உடைந்தது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சூலூர் அருகே கார் மீது சரக்கு லாரி மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

அடுத்த செய்தி