ஆப்நகரம்

மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு : தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம் !!

கால்நடை பெண் மருத்துவரை தொடர்ந்து, மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Nov 2019, 10:03 am
ஹைதராபாத் அருகே, கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், மற்றொரு பெண் எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil prt


தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அருகே, சைபராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Priyanka Reddy: பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை!!

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், சம்ஷாபாத் பகுதிக்கு உட்பட்ட சித்துலகுட்டா சாலைக்கு அருகே, வனத்தை போன்ற அடந்த மரங்கள் நிறைந்த இடத்தில் மற்றொரு பெண்ணின் உடலை எரிந்த நிலையில் போலீசார் வெள்ளிக்கிழமை இரவு(நவம்பர் 29) கண்டறிந்தனர்.

35 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடல்,உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பெண்ணும் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா எனத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருவதாக, போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகே கோயில் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி