ஆப்நகரம்

முத்தமிட்டபோது ஏற்பட்ட சிக்கல்.. மனைவியின் நாக்கை கத்தியால் வெட்டிய கணவர்...

அகமதாபாத்தில் தனது மனைவிக்கு ஆசையாக முத்தமிட்ட பொழுது ஏற்பட்ட விபரீதத்தினால் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 15 Oct 2019, 5:40 pm
Samayam Tamil 5
மனைவிக்கு முத்தம் கொடுத்ததற்காகவா சிறை? என எல்லோருக்கும் கேள்வி எழும். ஆனால் அவர் அதற்காக மட்டும் கைதாகவில்லை, அவர் ஏற்கெனவே நிறைய தில்லாலங்கடி வேலைகளை பார்த்துள்ள பழைய குற்றவாளி. இது குறித்து தெரிந்துகொள்வோம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் அயூப் மன்சூரி (46). இவருக்கு தஸ்லீம் என்ற மனைவி உள்ளார். கடந்த 9 ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது இருவரும் முத்தம் பரிமாறிக் கொண்டுள்ளனர். முத்தம் தீவிரமானதால் இருவரும் நாக்கும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டது.
தர்மசங்கடத்திற்கு ஆளான இருவரும் இந்த வினோத சிக்கலிலிருந்து விடுபட நீண்ட நேரம் முயற்சித்துள்ளனர்.

புதைக்கப்பட்ட குழந்தையை 48 மணி நேரத்துக்குபின் மீட்டு டாக்டர்கள் சிகிச்சை!

இருப்பினும் விடுபட கஷ்டப்பட்டதால் அயூப் மன்சூரி, வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியின் மூலம் தனது மனைவியின் நாக்கை அறுத்துள்ளார். அதன் பின்பு இருவரும் விடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தஸ்லீமின் நாக்கிலிருந்து வந்த ரத்தத்தை பார்த்து அயூப் மன்சூரி இரக்கமே இல்லமால் வீட்டின் கதவை வெளியில் பூட்டி விட்டு தப்பியோடியுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த அயூப் மன்சூரியின் சகோதரர் இட்ரிஸ் மன்சூரி, தஸ்மீனை மீட்டு எல்லிஸ் மேம்பாலம் அருகில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

பொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் அத்துமீறல்..! 5 வயது சிறுமிக்கு சித்ரவதை..

இதுகுறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தண்ணி ஆகாரங்கள் மட்டும் கொடுக்கப்படுவதாக போலீசார் நடத்திய விசாரணையில் மன்சூரியின் சகோதரர் இட்ரிஸ் கூறினார். மேலும் பல தகவல்கள் இந்த விசாரணையில் தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தஸ்லீம், ஆயுத் முன்சாரிக்கு மூன்றாவது மனைவியாவார்.

இவருடைய முதல் மனைவியை எரித்து கொலை செய்ததாகவும், இரண்டாவதாக திருமணம் செய்த மும்பை பெண்ணை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததால் அவர் ஓடி விட்டதாகவும் தெரிய வந்தது. தற்போது மூன்றாவது மனைவியையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டார். இதனால் ஆயுத் முன்சாரி மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வெஜால்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி