ஆப்நகரம்

செங்கல்பட்டில் பரபரப்பு: அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை..!

செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Apr 2021, 9:41 pm
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரைச் சேர்ந்தவர் திருமாறன். அதிமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் அதிபராகவும் உள்ளார். அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்புடன் வெளியில் சென்று வந்துள்ளார்.
Samayam Tamil file pic


இந்த நிலையில், திருமாறன் இன்று மாலை கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது அவருடன் பாதுகாப்பு காவலரும் இருந்துள்ளார். கோவிலுக்கு சென்று திரும்பும் போது திருமாறன் மீது மர்மகும்பல் வெடிகுண்டு வீசி தாக்கியுள்ளது.

அதில் படுகாயமடைந்த திருமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் வெடிகுண்டு வீசிய கும்பலில் ஒருவரை பாதுகாப்பு போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அங்கேயே பலியான நிலையில் மற்ற 3 பேர் தப்பியோடினர்.

நிர்வாண வீடியோ, காருக்குள் கொடுமை, சித்ராவை போல நடக்கக்கூடாது - நடிகை பரபரப்பு

இந்த சம்பவத்தின் போது திருமாறனின் மனைவிக்கு காயம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார் தப்பி சென்ற மூவரை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் சமயங்களில் அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருவதாக அப்பகுதியினர் அச்சமுடன் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி