ஆப்நகரம்

ஆண்டிப்பட்டியில் அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை: காவல் துறை விசாரணை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அதிமுக மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 22 Jul 2019, 1:24 pm
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக பிரமுகர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil Theni Admk


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வி. ரெங்கநாதபுரத்தை சேர்ந்த பாண்டித்துரையின் மகன் சதீஷ் (25). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் இவர் ஆண்டிபட்டி அதிமுக மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் சதீஷ் இன்று காலை மர்மமான முறையில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைத்திற்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் நடந்தது கொலையா இருக்குமோ என்ற கோனத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்பநாய் மற்றும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

ஆண்டிபட்டி துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆண்டிபட்டி ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன், ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளர் சுல்தான் பாஷா, ஆண்டிபட்டி காவலர்கள் தீவிர சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி