ஆப்நகரம்

கோயிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: அம்மன் கோயில் பூசாரி கைது

கொடைக்கானல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி கைது

Samayam Tamil 14 Jan 2022, 8:26 pm
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த நாயுடுபுரத்தில் அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலில் சின்னபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் என்பவர் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுமி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளார்.
Samayam Tamil poosaari arrest


அப்போது, பூசாரி ராமசுந்தரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சிறுமியை கோயிலில் அடைத்து வைத்துள்ளார். இதையடுத்து, மகளை காணவில்லை எனக்கூறி சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

ஆனால், எங்கும் கிடைக்காததால் சிறுமி கடைசியாக கோயிலுக்கு சென்றதால் அங்கு சென்று பூசாரியிடம் விசாரித்ததில் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மன அழுத்தம் காரணமாக மனைவி, மகனை விட்டுட்டு காவலர் தற்கொலை..! புதுச்சேரியில் சோகம்

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பூசாரியிடம் விசாரித்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அறையில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே சிறுமியை மீட்ட போலீசார் பூசாரி ராமசுந்தரத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி