ஆப்நகரம்

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்தனர். அவருக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 27 Apr 2019, 1:03 pm
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil arrest


தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.

கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வேறொரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததும், போலீசார் கைது செய்த போது, சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின் திருமணம் செய்து கொள்வதாக எழுதிக் கொடுத்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஏற்கனவே பாலியல் வன்முறை வழக்கில் கைதான ராணுவ வீரர், தற்போது மீண்டும் மற்றொரு சிறுமியிடமும் அத்துமீறியுள்ள நிலையில், அவருக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி