ஆப்நகரம்

செம்மரக் கடத்தல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள் கைது!

திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 14 Feb 2020, 3:11 pm
தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்ட கூலித் தொழிலாளிகள் ஆந்திர மலைப் பகுதிகளில் செம்மரம் வெட்டச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
Samayam Tamil செம்மரக் கடத்தல்


திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய கூடுதல் கமாண்டன்ட் ரவி சங்கருக்கு செம்மரம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

நெல்லை: சொகுசு காரில் ஆடுகளை திருடும் கும்பல்!

அந்தத் தகவலின் அடிப்படையில் ஆர்.எஸ்.ஐ. வாசு, விஜயநரசிம்மலு தலைமையில் போலீசார், வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது இன்று அதிகாலை ஸ்ரீனிவாச மங்காபுரம் எதிரே உள்ள வனப்பகுதியில் இருந்து ஒரு கார், ஒரு டெம்போ டிராவலர் வருவதை பார்த்த போலீசார் அதனை நிறுத்த முயன்றனர்.

கணவரின் அண்ணனையே வெட்டி சாய்த்த பெண்... ஆம்பூர் அருகே கொடூரம்

போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் வாகனத்தில் இருந்த 52 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலித் மாணவி தொடர்ச்சியாக பலாத்காரம்..! ஆசிரியரின் சித்ரவதை தாங்காமல் தற்கொலை முடிவு...

கைது செய்யப்பட்டவர்களில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரகாஷ் ,ஜெயராம், கார்த்தி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் ,செல்லா, சாமிகண்ணு , பூச்சி, ரவி ,ஜெயபால், விஜயகுமார் மற்றும் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி