ஆப்நகரம்

ஆந்திராவில் தனியார் பேருந்தில் சிக்கிய ரூ. 3 கோடி..!

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்ட சோதனை சாவடி அருகே தனியார் பேருந்தில் எடுத்து வரப்பட்ட 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Apr 2021, 4:39 pm

ஹைலைட்ஸ்:

  • பறிமுதல் செய்யப்பட்ட பணம் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு சேர்ந்தது
  • சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil money seized
ஆந்திரா - தெலங்கானா எல்லையான பஞ்சலிங்கா சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்த எஸ்ஆர்எஸ் தனியார் பேருந்தை வழி மறித்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்துக்குள் பயணித்த சேத்தன் குமார் என்பவரது உடைமைகளை சோதனையிட்டதில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ .3 கோடியே 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து சேத்தன் குமாரை கீழே இறக்கிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பணம் சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு சேர்ந்த பணம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை: தகாத உறவில் இருந்த பெண்ணை தீ வைத்து கொளுத்திய காதலன்..! பதைபதைக்கும் காட்சி

தொடர்ந்து அவரை கைது செய்த கர்னூல் போலீசார் விசாரணைக்கு கொண்டு சென்றனர். பஞ்சலிங்கா சோதனை சாவடியில் சோதனைக்குட்பட்ட பேருந்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி