ஆப்நகரம்

பணமில்லாத கூலித் தொழிலாளர்களை கைது செய்யும் ஆந்திரா போலீஸ்!

சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முயன்ற கூலித் தொழிலாளர்களை கைது செய்து பள்ளியில் அடைத்து வைத்துள்ள ஆந்திரா போலீஸ்...

Samayam Tamil 17 Apr 2020, 8:59 pm
ஊரடங்கை மதிக்காமல் ஆந்திராவில் சாலைகளில் சொந்த ஊரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்களைப் பிடித்த போலீசார், அவர்களை தனிமைப்படுத்தும் மையங்களுக்கு கொண்டு சென்றனர்.
Samayam Tamil பணமில்லாத கூலித் தொழிலாளர்களை கைது செய்யும் ஆந்திரா போலீஸ்!
பணமில்லாத கூலித் தொழிலாளர்களை கைது செய்யும் ஆந்திரா போலீஸ்!


விஜயவாடா, குண்டூர், அமராவதி ஆகியவை உள்ளிட்ட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் வெளியூரிலிருந்து வந்திருந்த கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களுக்கு இப்போதைய நேரத்தில் வேலை கிடைக்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நடைப்பயணமாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களில் பலர் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் துனி அருகே போலீசார் ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்களை கண்காணித்து கொண்டிருந்த போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

நடந்தே சென்ற எஸ்டேட் தொழிலாளர்கள்: போலீஸ் செய்ததைப் பாருங்கள்!

அவர்களிடம் தொடர் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்டவர்களைத் துனி மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியில் தனிமை முகாம்களை ஏற்படுத்தித் தங்க வைத்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் துனியில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யச் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி