சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி ஆறுமுகம் தனது ஊழியர் ரமேஷ் என்பவருடன் அமைந்தகரை அருகே அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களை இரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து ஆறுமுகத்தை வெட்ட தொடங்கியது. பதறி போன ஆறுமுகம் சாலையில் இறங்கி தப்பியோட முயன்றார்.
ஆனால், ஆறுமுகத்தை விடாமல் விரட்டி சென்ற கும்பல் பொதுமக்கள் மத்தியில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அமைந்தகரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சென்னை பைனான்சியரை ஓட ஓட வெட்டும் நபர்கள்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி...
இதற்கிடையே, பைனான்சியர் ஆறுமுகத்தை கொலை செய்ததாக சந்திரசேகர் மற்றும் ரோஹித் ராஜ் ஆகிய இருவர் நேற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கிஷோர் என்பவரை இன்று போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் இவ்வழக்கில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்போது, அவர்களை இரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து ஆறுமுகத்தை வெட்ட தொடங்கியது. பதறி போன ஆறுமுகம் சாலையில் இறங்கி தப்பியோட முயன்றார்.
ஆனால், ஆறுமுகத்தை விடாமல் விரட்டி சென்ற கும்பல் பொதுமக்கள் மத்தியில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அமைந்தகரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சென்னை பைனான்சியரை ஓட ஓட வெட்டும் நபர்கள்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி...
இதற்கிடையே, பைனான்சியர் ஆறுமுகத்தை கொலை செய்ததாக சந்திரசேகர் மற்றும் ரோஹித் ராஜ் ஆகிய இருவர் நேற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கிஷோர் என்பவரை இன்று போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் இவ்வழக்கில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.