ஆப்நகரம்

பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை!

சென்னை பல்லாவரத்தில் ஒழுங்காக பணிக்கு வராததால், கண்டித்த ராணுவ அதிகாரியை, ரைபிள் மேன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளாது.

Samayam Tamil 27 Aug 2019, 12:27 pm
சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரியை சுட்டுக்கொன்ற ரைஃபிள் மேன், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை!
பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை!


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் ஜோஷி, ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்த இவர், பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு, பிரவீன் குமாருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றிய ரைபிள் மேன் ஜம்ஷீருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பிரவீன் தனது அறைக்கு சென்று தூங்கிவிட்டார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த ஜம்ஷீர், இன்று அதிகாலை 3 மணியளவில், ஹவில்தாரின் அறைக்குச் சென்றார்.

RBI: மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி அள்ளி வழங்கிய ஆர்பிஐ!!

அங்கு தூங்கிக் கொண்டிருந்த பிரவீன் குமாரை, ஜம்ஷீர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வருவதற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.

இதையடுத்து உடனடியாக இருவரும் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டை விட்டனரா சிதம்பரத்தின் மெத்த படித்த வழக்கறிஞர்கள்!!

ரைஃபிள் மேன் ஜம்ஷீர் ஒழுங்காக பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனை ஹவில்தாரான பிரவீன் குமார் கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்து ஜம்ஷீர், பிரவீனை கொலை செய்தது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

காதலியை காருக்குள் தள்ளி உயிருடன் சமாதி கட்ட முயன்ற சைக்கோ இளைஞர்..!

அடுத்த செய்தி