ஆப்நகரம்

கழிவறைக்குள் புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்த காவலர் கைது!

டேராடூனில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தப்பியோடிய காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 25 Aug 2020, 8:39 pm
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் தமபதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். சிறுமியின் தந்தை பார்வையற்றவர். அதுபோல தாயும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று சிறுமி தனது வீட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
Samayam Tamil file pic


இதனால், சிறுமியின் தாய் கழிவறையின் கதவை பலமுறை தட்டி சத்தமிட்டுள்ளார். ஆனால், உட்பகுதி பூட்டப்பட்டிருந்த அறையில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. அதையடுத்து அருகில் இருப்பவர்களின் உதவியுடன் சிறுமியின் தாய் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது , சிறுமி சுயநினைவின்றி தரையில் படுத்தவாறு கிடைக்க, உள்ளே இருந்து ஒரு நபர் தெறித்து ஓடியுள்ளார். இந்நிலையில், சிறுமியை வீட்டிற்கு மீட்டு கொண்டு வந்த தாய், உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு பரிசோதித்தல் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியது, உதவி காவல் துணை ஆய்வாளர் சஞ்சீவ் ஜகுடி என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிறையில் அடைத்தனர்.

13வயது என்றுகூடப் பார்க்காமல், போலீஸ் அராஜகம்: தண்டனை பணியிடமாற்றம்!

உடல் ரீதியான குறைபாடுகளை கொண்ட மகளை போலீசே பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி