ஆப்நகரம்

இராமநாதபுரம்: ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ‘டிப் டாப்’ ஆசாமி கைது!

இராமநாதபுரம் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதனமுறையில் திருடியபோது ஏடிஎம் திருடர் காரைக்குடியைச் சேர்ந்த வாலிபர் சிக்கினார். அவரிடமிருந்து ரூபாய் 25 ஆயிரம் உட்பட 2லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Samayam Tamil 5 Oct 2019, 10:50 am
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு களமிறங்குகின்றனர். அதிலும் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மிஷினில் கை வைப்பதைவிட மக்களின் அறியாமையை அதிகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
Samayam Tamil Untitled collage (5)


காரைக்குடியைச் சேர்ந்த கோபி (36) என்பவரும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருச்சி, சிவகங்கை, மதுரை, திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாத முதியவர்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து அவர்களுடைய ஏடிஎம் கார்டுகளை வாங்கி அதற்கு பதிலாக போலி ஏடிஎம் கார்டுகளை அவர்களிடம் கொடுத்துவிடுவார். பின் அவர்களது ஏடிஎம் கார்டு மூலம் அதிலுள்ள தொகை அனைத்தையும் எடுத்துக்கொள்வார். இவ்வாறு நூதனமாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கோபியை இராமநாதபுரம் குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து பஜார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் ஏடிஎம் சென்டர்களுக்கு திருடச் செல்லும் பொழுது கோபி அழகாக தோற்றமளிக்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் புது சட்டை அணிந்து செல்வாராம், இதனால் இவருக்கு புது சட்டை கோபி என்ற பெயரும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த ஆறு மாதங்களாக தமிழகம் முழுவதிலும் உள்ள 24 மாவட்டங்களில் நூதன முறையில் திருடி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இராமநாதபுரம் வங்கி ஏடிஎம் மையத்தில் திருடிய ரூபாய் 25 ஆயிரம் உட்பட 2லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி