ஆப்நகரம்

தீபாவளிக்கு போனஸ் தரல போல, ரூ. 4.25 கோடியுடன் ஏடிம்எம் வேனில் தப்பிய டிரைவர்..!

மும்பை அருகே கோடி ரூபாய் பணத்துடன் ஏடிஎம் வேன் ஓட்டுநர் தப்பி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Nov 2020, 3:57 pm
மும்பையில் கடந்த வியாழன் அன்று மாலை விரார், போலின்ஜ் ஆகிய நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத்தை டெப்பாசிட் செய்வதற்காக வங்கி வேன் ஒன்று செயல்பட்டு கொண்டிருந்தது. சுமார் ரூ. 4.25 கோடி வைக்கப்பட்டிருந்த அந்த வேனில் ஒரு மேலாளர், உதவியாளர், துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி மற்றும் டிரைவர் என நான்கு பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Samayam Tamil மும்பை ஏடிஎம் கொள்ளை


அப்போது, போலின்ஜ் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக வேன் நிறுத்தப்பட்டுள்ளது. மேலாளரும், ஏடிஎம் உதவியாளர் மற்றும் செக்யூரிட்டியும் வேனை விட்டு இரங்கி சென்று ஏடிஎம்மிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது, டிரைவர் வேனை திடீரென இயக்கி அங்கிருந்து தப்பியுள்ளார்.

உடன் வந்தவர்களிடம் எந்த வாகனமும் இல்லாததால், அந்த வேனை மடக்கி பிடிக்காமல் போயுள்ளது. இந்நிலையில், 4.25 கோடி ரூபாய் வங்கி பணத்துடன் தப்பி சென்ற டிரைவர் ரோஹித் பப்பன் (26) மீது கொள்ளை வழக்கை பதிவு செய்துள்ள மும்பை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

கணவன், மனைவியை வெட்டி சாய்த்த இளைஞர்கள்..! ஈரோட்டில் பயங்கரம்

சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது '' தீபாவளி காரணமாக மக்கள் அதிகமாக பணம் எடுக்க வாய்ப்புள்ளதால், பல்வேறு ஏடிஎம் மையங்களில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக சுமார் 4.25 கோடி ரூபாய் அந்த வேனில் இருந்துள்ளது. வேனுடன், பணத்தை கொள்ளையடித்து சென்ற டிரைவர் மீது பிரிவு 392 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி விரைவில் பிடிபடுவார்'' என தெரிவித்தார்.

பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் ஏடிஎம் வாகனத்துடன் தப்பிய டிரைவரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி