ஆப்நகரம்

லாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்!

லாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட திருவெறும்பூர் தாசில்தாரின் ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Jun 2019, 2:28 pm
லாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட திருவெறும்பூர் தாசில்தாரின் ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil லாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்!
லாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்!


தமிழகத்தில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் அளவுக்கதிகமாக அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி பல இடங்களில் செயல்பட்டவந்த மணல்குவாரிகளும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இரவுநேரங்களில் பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு ஆளுங்கட்சி அதிகாரிகள் உதவியுடன் மணல் கடத்தப்படுவது நிகழ்ந்து வருகிறது.

.திருவெறும்பூர் பகுதியில் பனையக்குறிச்சி பகுதியில் செயல்பட்டுவந்த மணல் குவாரி மூடப்பட்ட நிலையில், மாட்டுவண்டி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினாலும் அவர்கள் வறுமை நிலையினைக் கருத்திற்கொண்டு கீழமுல்லைக்கொடி பகுதியில் மாட்டுவண்டி மணல்குவாரி 3 தினங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.

இருப்பினும் திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் திருட்டு மணல் லாரிகள் மூலம் அள்ளப்பட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுறை துணையாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் தாசில்தார் அண்ணாதுறை மணல் லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் அவர் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதும், அதற்கு அவர் தீபாவளி வரை கவனித்து விடுகிறேன். 2 லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறும் செல்போன் உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி