ஆப்நகரம்

திருமணமாகாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கு போட்டு தற்கொலை

சென்னை வேளச்சேரியை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் திருமணமாகத விரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 7 Jul 2019, 4:56 pm
சென்னை வேளச்சேரி அருகே திருமணமாகாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Samayam Tamil suicide hang


சென்னை வேளச்சேரியை அடுத்த கோவிலம்பாக்கம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (32). ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தாா். தாய் இறந்து விட்ட நிலையில் இவர் தனது தந்தை செல்வராஜூடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர்.

பல இடங்களில் பெண் பார்த்தும் பெண் சரியாக அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் சரவணன் விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சரவணன் மது போதையில் வீட்டுக்கு வந்து தனி அறையில் படுத்து தூங்கியுள்ளார். இரவு 2 மணியளவில் தந்தை செல்வராஜ் எழுந்து பார்த்தபோது சரவணன் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பள்ளிக்கரணை காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி