ஆப்நகரம்

நுரையீரலில் படிந்த தண்ணீர்... அறுவை சிகிச்சையின் போது நடிகை சேதனா ராஜ் மரணம்

கன்னட சின்னத்திரை நடிகை பெங்களூருவில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையின் போது உயிரிழத்த சம்பவம் கன்னட சின்னத்திரையுலகில் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Samayam Tamil 17 May 2022, 6:57 pm
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அப்பிகெரேயில் வசித்து வந்தவர் சேதனா ராஜ் (21). இவர் கன்னடத்தில் கீதா, டோரேசானி, ஒளவினா நில்டானா ஆகிய பிரபல சீரியல்களில் நடித்துள்ளார். 'ஹவயாமி' என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், சேதனா ராஜ் கொழுப்பு அறுவை சிகிச்சைக்காக கடந்த திங்கட்கிழமை காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகியுள்ளார்.
Samayam Tamil kannada tv actress chethana raj death
kannada tv actress chethana raj death


அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு நடந்து அதன்படி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் போதே சேதனா ராஜ் இறந்துள்ளார். இந்த அதிர்ச்சியான தகவலை கேட்டு சேதனா ராஜின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் என்ன நடந்து என்று கேட்டனர். அப்போது, அறுவை சிகிச்சையின் போது சேதனா ராஜின் நுரையீரலில் தண்ணீர் படிந்ததால் மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை ஏற்காத அவரது பெற்றோர், மருத்துவமனையின் அலட்சியத்தால் எனது மகள் இறந்துவிட்டாள் என்றும் பெற்றோர் அனுமதியின்றி சரியான உபகரணங்கள் இல்லாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாலும் ஐசியூவில் சரியான வசதிகள் இல்லை என்பதாலும் எனது மகள் இறந்துவிட்டார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அப்பாதான் உயிர்... லவ் யூ அப்பா.... கடலூர் மாணவி தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம்...

மேலும், சேதனா ராஜ் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்ய எங்களிடம் அனுமதி கேட்டிருந்தார், ஆனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று நாங்கள் மறுத்துவிட்டோம்... எங்களுக்கு தெரியாமலேயே அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என கூறும் சேதனா ராஜின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ரீதியாக அணுகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி