ஆப்நகரம்

வங்கி ஊழியர்கள் கவனத்தை திசைத்திருப்பி ரூ. 58 லட்சம் பணம் கொள்ளை..!

ஹைதராபாத்: ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த வங்கி ஊழியர்களின் கவனத்தை திசைத்திருப்பி பல லட்சம் பணத்தை கொள்ளயடித்த திருடர்களை பிடிக்க தெலங்கானா போலீசார் 20 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

Samayam Tamil 10 May 2019, 10:38 am
ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பிய ஊழியர்கள் கவனத்தை திசைத்திருப்பி ரூ. 58 லட்சம் கொள்ளையடித்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க 100 காவலர்கள் கொண்ட 20 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil வங்கி ஊழியர்கள் கவனத்தை திசைத்திருப்பி ரூ. 58 லட்சம் பணம் கொள்ளை
வங்கி ஊழியர்கள் கவனத்தை திசைத்திருப்பி ரூ. 58 லட்சம் பணம் கொள்ளை


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வனஸ்தலிபுரத்தில் உள்ள பணமா சென்டர் என்ற இடத்தில் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக தனியார் வங்கி வாகனத்தில் பணம் கொண்டு செல்லப்பட்டது. வங்கி ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதில் முனைப்பாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்ப முயன்றுள்ளனர்.

வாகனத்திற்கு காவலாக நின்றவரிடம் உங்களுடைய பணம் கீழே விழுந்து கிடக்கிறது என்று கூறி ரூ. 1600/- பணத்தை கீழே போட்டு அவரிடம் காண்பித்தனர். அவர் அந்த பணத்தை எடுப்பதற்குள் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 58.7 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.

ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த வனஸ்தலிபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் அறை மற்றும் வங்கியின் முகப்பு ஆகியவற்றில் பொறுத்தப்பட்டிருக்கும் சிசி டிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.

கொள்ளையர்களை கண்டு பிடிக்க ராட்ச கொண்டா காவல் ஆணையர் மோகன் பகவத் தலைமையில் 100 போலீசார் கொண்ட 20 தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம், கர்நாடக மாநிலத்தில் பணத்தை கொள்ளை அடித்து சென்ற கும்பலை பிடிப்பதற்காக சென்றுள்ளனர். வனஸ்தலிபுரத்தில் பண பெட்டியுடன் கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் முஷராபாத்தில் கட்டண பொது கழிப்பிடத்திற்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

அங்கு இருந்த பாதுகாவலரிடம் வெளியே 500 ரூபாய் விழுந்திருக்கிறது அது உங்களது என தெரிவித்து காவலரை வெளியே அனுப்பிய கொள்ளையர்கள் பண பெட்டியுடன் உள்ளே நுழைந்து அந்தப் பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு தாங்கள் கொண்டு வந்த இரண்டு பைகளில் பணத்தை மாற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து சென்ற கொள்ளை கும்பல் நாம்பள்ளி வரை சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நாம்பள்ளியிலிருந்து எங்கு சென்றார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பழைய குற்றவாளிகளான திப்பு, ராம் மகேந்திரன், பிஸ்மா, மதுசூதன் ,என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களை பிடிக்க தெலங்கானா போலீசார் திருச்சி விரைந்துள்ளனர்.

பணம் நிரப்பக்கூடிய வாகனம் எப்படி சரியாக 10 மணிக்கு வரும் என்பதை கொள்ளையர்கள் தெரிந்து கொண்டார்கள். பணம் கொள்ளையடிக்கப்பட்டதில் வங்கி ஊழியர்களுக்கு அல்லது பணத்தை கொண்டு வந்த சேப் கார்டு பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி