ஆப்நகரம்

பார் சூப்பர்வைசர் கீழே தள்ளிவிட்டதில் முதியர் உயிரிழப்பு!

மதுரவாயல் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் தள்ளிவிட்டதில், முதியவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 13 Mar 2019, 10:48 am
மதுரவாயல் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் தள்ளிவிட்டதில், முதியவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil பார் சூப்பர்வைசர் கீழே தள்ளிவிட்டதில் முதியர் உயிரிழப்பு!
பார் சூப்பர்வைசர் கீழே தள்ளிவிட்டதில் முதியர் உயிரிழப்பு!


மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனை ஒட்டி டாஸ்மாக் பாரும் உள்ளது. இதனிடையே பாரில் தங்கி வேலை செய்து வந்த முதியவர் ஒருவர், இறந்து கிடப்பதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவர் தலையின் பின் பகுதியில் ரத்தக் காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாரில் சூப்பர்வைசராக இருக்கும் ராஜா என்பவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்த முதியவர் பல வருடங்களாக பாரில் தங்கி வேலை செய்து வந்ததும், நேற்று மாலை வேலைக்கு தாமதமாக வந்ததால் பார் சூப்பர்வைசர் ராஜா அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளியதில் முதியவர் இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ராஜவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி