ஆப்நகரம்

கல்யாணம் பண்ணிக்க மாற்றாரு சார்... காதலன் மீது ஜல்லிக்கட்டு ஜூலி புகார்..!

பிக்பாஸ் ஜூலியை காதலிப்பதாக கூறி நான்கு ஆண்டுகளாக பழகி விட்டு கம்பி நீட்டிய வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2021, 2:37 pm
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷமிட்டு பிரபலமானவர் மரியா ஜூலியானா (26). பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்று செலிபிரெட்டியாகவும் வளர்ந்துள்ளார். இவர் சென்னை பரங்கிமலையில் உள்ள புனித தோமையர் மலை பகுதி அருகே வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் காதலன் மீது மோசடி புகார் கொடுத்தார்.
Samayam Tamil கோப்புப்படம்


அந்த புகாரின் விவரமாவது, சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மனிஷ் (26) என்பவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஜூலியும், மனிஷும் காதலித்து வந்துள்ளனர். ஜூலியை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக பழகி வந்த மனிஷ், ஜூலியிடம் இருந்து 2.30 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பல்சர் பைக், இரண்டு சவரன் தங்க செயின் மற்றும் ஃபிரிட்ஜ் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.


இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் மதத்தை காரணம் காட்டி ஜூலியை மனிஷ் பிரேக் அப் செய்ததாகவும், தொடர்ந்து பணம் கேட்டு ஜூலியை அவர் தொந்தரவு செய்து வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்ந்துவிட்டு ஏமாற்றுவதாகவும் மனிஷ் மீது ஜூலி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


திருமணம் ரத்து... அன்றைய நாளே 17 வயது சிறுமி தற்கொலை... பெற்றோரிடம் எழும் சந்தேகம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஜூலி வருவதற்கு முன்பு வரை சமூகஊடகங்களில் 'சிங்கப்பெண்' என்று நெட்டிசன்களால் அழைக்கப்பட்டு வந்த ஜூலி அதற்கு பின்னர் விமர்சனங்களால் கடுமையாக தாக்கப்பட்டார். தொடர்ந்து, 'அம்மன் தாயி' என்ற திரைப்படத்தில் நடித்து டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். சோசியல் மீடியாவில் சில காலம் அவரது பெயர் அடி படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது காதலன் மீது மோசடி புகார் கொடுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி