ஆப்நகரம்

யாரு வச்ச நெருப்பு?- முற்றிலும் எரிந்து நாசமான பாஜக அலுவலகம்!

பாஜக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீவைத்துச் சென்றதால் முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Jan 2020, 12:19 pm
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு திரிணாமூல் காங்கிரஸ், பாஜக இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
Samayam Tamil Fire


சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களின் போது இருதரப்பு தொண்டர்களும் மாறி, மாறி தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அசான்சோல் அருகே சலான்பூர் என்ற கிராமத்தில் அமைந்திருந்த பாஜக அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் தீவைத்து சென்றுள்ளனர்.

மாவு கட்டு போட்டாச்சு; அப்புறம் என்ன? கெஞ்சும் ரவுடி கணேசனின் வீடியோவை பாருங்க!

உடனே தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வருவதற்குள் அந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து நாசமானது. இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பு என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அசான்சோல் நாடாளுமன்ற தொகுதி பாபுல் சுப்ரியாவிற்கு உரியது.

இப்படியொரு அதிர்ச்சி காரணம்; பெரியார் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!

இவர் மத்தியில் ஆட்சி செய்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது தொகுதியில் இருந்த பாஜக அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘குரூப் 4’ முறைகேடு விசாரணை தொடங்கியது!

அடுத்த செய்தி