ஆப்நகரம்

மின்தடைக்கு காரணமான அணில்களை பிடிக்க பாஜகவினர் மனு..!

மின்சார தட்டுப்பாடு காரணமாக அணில்களை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டன.

Samayam Tamil 24 Jun 2021, 5:12 pm
தமிழகத்தில் பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளதால் கிளைகள் கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
Samayam Tamil மனு கொடுத்த பாஜகவினர்


மேலும், அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார். இதற்கு பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மின்வெட்டுக்கு காரணமான அணில்களை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது, '' புராணங்களிலும் இதிகாசங்களிலும் அணிலுக்கு நன்றிக்கு உரித்தான எடுத்துக்காட்டாகவும் விளங்கி வரும் நிலையில் அணில் மீது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் கூறுவது ஏற்புடையதல்ல. கடந்த 10 ஆண்டுகளில் மின்சார தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டபோது 45 நாட்களே ஆன திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மீண்டும் மின் தடை ஏற்படுவது மக்களிடையே வெறுப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உடல் முழுக்க காயங்கள், ஆயுர்வேத பெண் மருத்துவர் அடித்துக்கொலை? கேரளாவை உலுக்கிய சம்பவம்

ஆகவே மின்சார தட்டுப்பாடு காரணமான அணில்களை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து தமிழ்நாட்டில் இனிமேல் மின்சார தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தமிழக முதலமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என காஞ்சிபுரம் பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது பாஜக காஞ்சிபுரம் நகர தலைவர் அதிசயம் குமார் நகர பொதுச் செயலாளர் ஜீவா என்கின்ற ஜீவானந்தம் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி