ஆப்நகரம்

திருச்சியில் இப்படியொரு பயங்கரம்; பிரபல பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை!

பாஜக மண்டல செயலாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Jan 2020, 3:14 pm
திருச்சி பாலக்கரை பகுதியில் பாஜக மண்டல செயலாளராக இருந்தவர் விஜயரகு. இவர் இன்று காலை காந்தி மார்க்கெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் விஜயரகுவை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
Samayam Tamil Murder


இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அவர்கள் தப்பிச் சென்றனர். இந்நிலையில் விஜயரகுவை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

டவுன்லோடு செய்து டிவிடி போட்டு விற்பனை; ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய திருச்சி நபர்கள்!

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயரகு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பின்னணியில் செல்போன் திருட்டு சம்பவம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வரகனேரியை சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்பவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஃப்ரீ டோல்கேட் இதுதான் - அடிச்சு காலி பண்ணிய மக்கள்; ஜாலியா செல்லும் வாகனங்கள்!

இதன்பேரில் பாபுவை காந்தி சந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே விஜயரகு மீது இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி காந்தி சந்தை காவல் நிலையத்தில் புகாரளித்து பாபு கைது செய்யப்பட்டார்.

அண்மையில் பாபு பிணையில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி விஜயரகு உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை முன்பு பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் விஜயரகுவின் மகள் காயத்ரி மற்றும் உறவினர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கடந்தாண்டு விஜயரகு வீட்டருகே நடத்தி வந்த டிபன் கடையில் இருந்து மிட்டாய் பாபு செல்போனை திருடினார்.

அதனை கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதுதான் உண்மையான முன்விரோதம். மற்றபடி இந்து -முஸ்லீம் பிரச்சினை என்பதெல்லாம் உண்மையில்லை" என்றனர்.

அடுத்த செய்தி