ஆப்நகரம்

தொப்புள் கொடியோடு தூக்கி எறியப்பட்ட பெண் சிசு, தஞ்சை சோகம்...

தஞ்சை அருகே பிறந்த சில நொடிகளே ஆன பெண் குழந்தை கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Sep 2020, 5:58 pm
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மாடாக்குடி என்ற கிராமத்தின் கோயில் குளத்தில் தொப்புள் கொடியுடன் குழந்தை ஒன்று சடலமாக கிடந்துள்ளது. அதை கண்ட அப்பகுதி மக்கள் , சம்பவம் குறித்து கிராம நிர்வாகத்திடம் தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து விவகாரம் பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளது.
Samayam Tamil Female infanticide


சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசுவின் சடலத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள காவல் துறையினர், பிறந்த சில நிமிடங்களே ஆன பெண் குழந்தையை குளத்தில் வீசி சென்றவர்களை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும்போது அங்கிருந்தவர்கள் அனைவருமே கண்ணீர் விட்டனர்.

குழந்தை ஆணா பெண்ணா? கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து பார்த்த கணவன்!

பெண் குழந்தையை வளர்ப்பதும், வளர்ந்த பிறகு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற காரணங்களால் சிசுக்களை பெற்றோர் கொள்ளும் சம்பவங்கள் இன்னமும் தொடர்கதையாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, சில சம்பவங்களுக்கு பின்னால் கள்ளிப்பால் கிழவிகளின் தூண்டுதல்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று உத்தர பிரதேசத்தில் பெண் குழந்தை வேண்டாம் என்று நினைத்த நபர் தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்து பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தியின் லிங்க் மேலே உள்ளது.

அடுத்த செய்தி