ஆப்நகரம்

குமரி கடலில் மாயமான சிறுவனின் உடல் மீனவர்கள் வலையில் சிக்கியது!

கன்னியாகுமரி கடற்கரையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி காணாமல் போன சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

Samayam Tamil 3 Oct 2020, 2:53 pm
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த சகாய ராபின் என்பவரின் 10 வயதான மகன் ரோஹித் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று சிறுவன் ரோகித், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் வீட்டு அருகே உள்ள கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.
Samayam Tamil file pic


அப்போது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலை எதிர்பாராதவிதமாக ரோஹித்தை இழுத்துச் சென்றது. இதைக்கண்டு இவரோடு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அலறியதைத் தொடர்ந்து அப்பகுதியினர் விரைந்து வந்து ரோஹித்தை மீட்க முயற்சித்தனர்.

அதற்கிடையே, கடல் அலை இழுத்துச் சென்றதால் ரோஹித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஊர்மக்களும் கடலோர காவல் குழுமத்தைச் சேர்ந்த போலீசாரும் தீவிரமாக சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில்,நேற்று அப்பகுதி மீனவர்கள் கட்டுமர படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அவர்களது வலையில் சிறுவனின் சடலம் சிக்கியுள்ளது.

10 வயது சிறுமியும், தந்தையும் வெட்டிப்படுகொலை..! வேலூரில் பயங்கரம்

உடனே மீனவர்கள் அந்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். மீன் வலையில் சிக்கிய சடலம் அலையில் காணாமல் போன ரோஹித்துடையது என தெரிய வந்தது. இதை கேள்விப்பட்ட சிறுவனின் குடும்பம் சம்பவ இடத்துக்கு வந்து மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுத சம்பவம் கண்கலங்க செய்தது. இதையடுத்து, போலீசார் சிறுவனின் சடலத்தை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி