ஆப்நகரம்

கட்டுக்கட்டாக சிக்கிய பணம், லஞ்சம் வாங்கவே தனி வீடு.! வேலூர் அரசு அதிகாரி கைது

வேலூர் அருகே மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் இருந்த கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 15 Oct 2020, 9:37 pm
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலூர் மண்டல முதன்மை சுற்றுசூழல் பொறியாளராக பணியாற்றி வந்தவர் பன்னீர் செல்வம். இந்நிலையில் காட்பாடி மண்டலத்தில் புதிதாக தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான அனுமதி முதல் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
Samayam Tamil spot picture


இதனால், ஒப்புதல் கொடுப்பதற்கு முன்னர் பன்னீர் செல்வம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் வந்துள்ளது. தொடர்ந்து, பன்னீர் செல்வத்தை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், பன்னீர் செல்வம் தங்கியுள்ள காட்பாடி வீட்டருகே முகாமிட்டனர்.

அப்போது, அவருடைய வீட்டை சோதனையிட்டபோது, கணக்கில் வராத 33 லட்சம் ரூபாயையும், ராணிப்பேட்டையில் உள்ள சொந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.25 கோடி ரூபாயையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பன்னீர் செல்வதை கைது செய்துள்ள போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கில் வெளிப்பட்ட மனைவியின் நடவடிக்கை, நள்ளிரவில் தீர்த்துக்கட்டிய கணவன்!

கைது சம்பவத்தை தொடர்ந்து, பன்னீர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான லஞ்ச பணத்தை பறிமுதல் செய்துள்ள சம்பவம் வேலூரில் பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி